ADDED : அக் 12, 2011 01:58 AM
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, மாயமான கல்லூரி மாணவியை போலீஸார்
தீவிரமாக தேடி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர்
நாசர் அலி.
அவரது மகள் ரோசம்மாள் (19), கடந்த 3ம் தேதி பள்ளிபாளையம் அருகே
கொக்கராயன்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளதர். மறுநாள்
அங்கிருந்து ரோசம்மாள் கல்லூரி சென்றுள்ளார்.அவர் வீடு திரும்பாததால்,
நாசர்அலி, பள்ளிபாளையம் போலீஸில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில்
போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாணவி ரோசம்மாளை தேடி வருகின்றனர்.


