/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெண்பட்டுக்கூடு விலை விரைவில் சீராகும் வாய்ப்புவெண்பட்டுக்கூடு விலை விரைவில் சீராகும் வாய்ப்பு
வெண்பட்டுக்கூடு விலை விரைவில் சீராகும் வாய்ப்பு
வெண்பட்டுக்கூடு விலை விரைவில் சீராகும் வாய்ப்பு
வெண்பட்டுக்கூடு விலை விரைவில் சீராகும் வாய்ப்பு
ADDED : ஜூலை 28, 2011 12:47 AM
பொள்ளாச்சி : 'வெண் பட்டுக்கூடுகளின் விலை விரைவில் சீராகும் வாய்ப்பள்ளது' என பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மல்பெரி செடி பயிரிட்டு பட்டுக்கூடு வளர்க்கும் தொழிலில் அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கிலோவுக்கு 400 ரூபாய் கிடைத்து வந்த வெண்பட்டுக்கூடு விலை கடந்த சில மாதங்களுக்கு முன் 300 ரூபாய்க்கு கீழ் சரிந்தது. ஒரு கிலோ பட்டு கூட்டிற்கு தற்போது 250 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. போதிய விலை கிடைக்காததால் மல்பெரி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில்,'பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மல்பெரி செடி அதிகளவு வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக பட்டு கூட்டின் விலை உயராமல் இருப்பதால் விவசாயிகள் விலை உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்த மாதம் பட்டு கூட்டின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன', என்றனர்.


