Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பொது பாதை வசதி இல்லாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

பொது பாதை வசதி இல்லாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

பொது பாதை வசதி இல்லாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

பொது பாதை வசதி இல்லாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

ADDED : அக் 12, 2011 01:18 AM


Google News
சிதம்பரம் : கிராமத்திற்குச் செல்ல பொதுப்பாதை அமைக்காத அரசை கண்டித்து கீழ குண்டலபாடி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கீழ குண்டலபாடி. இங்கு 55 தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிக்கு பொது வழியில்லாமல் பல ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதித்துள்ளனர். இது தொடர்பாக பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இதனைத் தொடர்ந்து நேற்று காலை கீழ குண்டலபாடியில் பாதிக்கப்பட்ட மக்கள், பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது பொதுப்பாதை ஏற்படுத்தித் தராத அரசை கண்டித்து வரும் 19ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்தனர். இது தொடர்பாக கலெக்டர், சிதம்பரம் ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us