/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தரமான ரோடாக மாற்றுவதே லட்சியம் : அ.தி.மு.க.,வேட்பாளர் உறுதிதரமான ரோடாக மாற்றுவதே லட்சியம் : அ.தி.மு.க.,வேட்பாளர் உறுதி
தரமான ரோடாக மாற்றுவதே லட்சியம் : அ.தி.மு.க.,வேட்பாளர் உறுதி
தரமான ரோடாக மாற்றுவதே லட்சியம் : அ.தி.மு.க.,வேட்பாளர் உறுதி
தரமான ரோடாக மாற்றுவதே லட்சியம் : அ.தி.மு.க.,வேட்பாளர் உறுதி
ADDED : அக் 03, 2011 10:56 PM
காரியாபட்டி : ''காரியாபட்டி நரிக்குடி ரோடு தரமில்லாமல் குண்டும் குழியுமாக இருப்பதால், இருவழிப்பாதையாக மாற்றி, தரமான ரோடு போடுவதே எனது லட்சியம்,''என அ.தி.மு.க., வேட்பாளர் அழகு கூறினார்.
காரியாபட்டி ஒன்றியம் 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் அவர் கூறியதாவது: விவசாயங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் இப்பகுதியில் உள்ள கண்மாய், ஊரணிகளை தூர்வாரி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுப்பேன். நல்ல குடிநீர் கிடைக்க தாமிரபரணி குடிநீர் திட்டத்தை கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன். முதல்வர் 'ஜெ' ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பசுமை வீடு திட்டம், மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட பொருட்களை இப்பகுதி மக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இந்த பகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் ரோடு வசதி, வாறுகால் வசதி, பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன். மழை நீர் சேமிப்பையும், மண் வளத்தையும் பாதுகாக்க மக்களை வலியுறுத்துவதோடு, விவசாயத்தை ஊக்குவிப்பேன். தடையில்லா போக்குவரத்து வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவேன். காரியாபட்டியிலிருந்து 32 கி.மீ.,தூரமுள்ள நரிக்குடிக்கு செல்ல பல மணி நேரம் ஆகிறது. இதற்கு ரோடு தரமில்லாமல் இருப்பதே காரணம். இவற்றை இருவழிச்சாலையாக மாற்றி தரமான ரோடு அமைப்பதே எனது லட்சியம், என்றார்.


