ADDED : ஆக 06, 2011 09:39 PM
ராஜபாளையம்:ராஜபாளையம் ஸ்டேட் பாங்க் முன் நடந்த வங்கி ஊழியர்களின்
ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் சங்க முன்னாள்
உதவிபொதுசெயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
உதவி பொது செயலாளர்
அய்யனார் முன்னிலை வகித்தார். வங்கிகள் தனியார் மயமாவதை கண்டித்தல்,
பொதுதுறை வங்கிகளில் அரசு பங்கு விகிதங்களை குறைத்தல், உலக வங்கியில் மூலதன
கடன் பெறுவது, வங்கிகளை இணைத்தல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான
பென்சன் கோருதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். சங்க செயலாளர்
வரதராஜன் நன்றி கூறினார்.


