Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நிலக்கடலையில் அதிக மகசூல்ஆயிரப்பேரி விவசாயி சாதனை

நிலக்கடலையில் அதிக மகசூல்ஆயிரப்பேரி விவசாயி சாதனை

நிலக்கடலையில் அதிக மகசூல்ஆயிரப்பேரி விவசாயி சாதனை

நிலக்கடலையில் அதிக மகசூல்ஆயிரப்பேரி விவசாயி சாதனை

ADDED : செப் 07, 2011 03:07 AM


Google News
தென்காசி:ஆயிரப்பேரி விவசாயி நிலக்கடலையில் அதிக மகசூல் பெற்று சாதனை படைத்துள்ளார்.வேளாண்மை துறை, புள்ளியல் துறை இணைந்து பயிர்களின் உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தி அளவை கணக்கிடுவதற்காக பயிர் மதிப்பீட்டாய்வை நடத்தி வருகின்றன.இதில் ஏதெச்சை எண்கள் கொண்டு வயல்கள் தெரிவு செய்யப்பட்டு அறுவடை மேற்கொள்ளப்பட்டு கிடைக்கும் மகசூல் கணக்கில் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கணக்கிடப்படும் மகசூல் மாநில மற்றும் தேசிய அளவில் பொருளாதார திட்டமிடலுக்கு பயன்படுகிறது. நடப்பாண்டில் தென்காசி வட்டாரத்தில் நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களில் இவ்வாய்வு நடக்கிறது.நிலக்கடலை பயிருக்கான பயிர் மதிப்பீட்டாய்விற்கு ஆயிரப்பேரி கிராமம் தேர்வு செய்யப்பட்டது. இக்கிராமத்தில் வயல் தெரிவு பணிகளை வருவாய் துறையினரின் துணையோடு மேற்கொண்ட தென்காசி வேளாண்மை அலுவலர் சேதுராமலிங்கம் இறுதியில் ராமையா என்பவருக்கு சொந்தமான வயலை தெரிவு செய்தார். இவ்விவசாயின் வயலில் 25 ச.மீ. பரப்பில் அறுவடை பரிசோதனை தென்காசி கோட்ட புள்ளியல் அலுவலர் ஆலிசெய்யது சிராசுதீன் பாவா மேற்பார்வையில் நடந்தது.

இப்பரிசோதனையில் 11.2 கிலோ நிலக்கடலையும், 26.2 கிலோ நிலக்கடலை செடியும் மகசூலாக கிடைத்தது. இந்த நிலக்கடலை மகசூல் ஓர் எக்டேருக்கு 4 ஆயிரத்து 560 கிலோவிற்கு சமமாகும். வேளாண்மை துறையால் சிபாரிசு செய்யப்படும் கோடை உழவு, சான்று பெற்ற விதைகள் பயன்படுத்துதல், பயிர் எண்ணிக்கை பராமரிப்பு, ஒருங்கிணைந்த களை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், ஜிப்சம் இடுதல், நுண்ணுரம் இடுதல் போன்ற தொழில் நுட்பங்களை பின்பற்றியதால் அதிக மகசூல் கிடைத்தது.

இந்த பயிர் அறுவடை பணிகளுக்கான ஏற்பாடுகளை தென்காசி வட்டார வேளாண்மை அலுவலர் சேதுராமலிங்கம், வேளாண்மை உதவி அலுவலர்கள் மாரியப்பன், சபரிராஜா, அன்சர்அலி செய்திருந்தனர். இத்தகவலை தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) உதயகுமார் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us