Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நவராத்திரியை முன்னிட்டு இன்று கண்காட்சி துவக்கம்

நவராத்திரியை முன்னிட்டு இன்று கண்காட்சி துவக்கம்

நவராத்திரியை முன்னிட்டு இன்று கண்காட்சி துவக்கம்

நவராத்திரியை முன்னிட்டு இன்று கண்காட்சி துவக்கம்

ADDED : செப் 15, 2011 11:30 PM


Google News
கோவை:மகளிர் குழுவினர் உற்பத்திப்பொருள் கண்காட்சி, காந்திபுரம் டவுன் பஸ்ஸ்டாண்டில் இன்று தொடங்குகிறது.கோவை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களில் பெரும்பாலானோர், பொருளாதாரக்கடன் பெற்று சுய தொழில் செய்து வருகின்றனர்.

சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை, காந்திபுரம் டவுன் பஸ்ஸ்டாண்டில், இன்று முதல் அக்.,15ம் தேதி வரை நடக்கிறது.மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், செயற்கை அலங்கார மலர்கள், மூலிகை பழ ரசங்கள், புடவைகள், செருப்புகள், நீலகிரித்தைலம், நறுமணப்பொருட்கள், சணல் பைகள், ஐம்பொன் நகைகள், பொம்மைகள், உணவுப்பொருட்கள், மண் பொம்மைகள், நவராத்திரி கொலு பொம்மைகள், கைத்தறிப் பொருட்களை கண்காட்சிக்கு வைக்கவுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us