ஸ்ரீமுஷ்ணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 30, 2011 10:44 PM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம், நகர செயலர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். நகர தலைவர் வைத்திலிங்கம், கந்தவேல் முன்னிலை வகித்தனர். முன்னதாக கட்டட தொழிலாளர்கள் கடைவீதி பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரூராட்சி அலுவலகம், மற்றும் ஸ்ரீமுஷ்ணம் வி.ஏ.ஓ., அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் நல வாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குதல். ஈ.எஸ்.ஐ., திட்டத்தை செயல்படுத்துதல் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


