/உள்ளூர் செய்திகள்/சேலம்/முறையான கவுன்சலிங் நடத்த வலியுறுத்திதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்முறையான கவுன்சலிங் நடத்த வலியுறுத்திதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
முறையான கவுன்சலிங் நடத்த வலியுறுத்திதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
முறையான கவுன்சலிங் நடத்த வலியுறுத்திதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
முறையான கவுன்சலிங் நடத்த வலியுறுத்திதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 17, 2011 03:22 AM
சேலம்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சேலம் மாவட்ட கிளை
சார்பில், முறையான கவுன்சலிங் நடத்த வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைச் செயலாளர்
வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிதம்பரம், மாநில செயற்குழு
உறுப்பினர் அர்ச்சுனன், முன்னாள் மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், மாறுதல் கலந்தாய்வுக்கு முன், பல்வேறு
மாவட்டங்களில் மாறுதல்கள் உத்தரவு வழங்கப்பட்டுள்ளன. இந்த மாறுதல்
உத்தரவுகளை ரத்து செய்து விட்டு, கவுன்சலிங் மூலமாக மாறுதல் உத்தரவு வழங்க
வேண்டும். ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். 354
நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தும்போது ஏற்படும்
தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவித்து, மாறுதல்
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், 831 நடுநிலைப்பள்ளிகளில்
இந்தாண்டு எட்டாம் வகுப்பு தொடங்கியுள்ள நிலையில், அந்தப் பள்ளிகளுக்கு
நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் வழங்கப்பட்டு, அந்த
இடங்களுக்கும் பதவி உயர்வு மாறுதல் வழங்க வேண்டும்.உதவி தொடக்கக் கல்வி
அலுவலர் பதவி உயர்வுக்கான 'பேனலில்' உள்ளவர்களுக்கு பதவி வழி மாறுதல் வழங்க
வேண்டும். அவ்வாறு ஏற்படும் காலியிடங்களுக்கும் சேர்த்து கவுன்சலிங் நடத்த
வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.பொருளாளர் கபிரியேல் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.