/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கெப்பிலிங்கம்பட்டி - விருதுநகர் தார் ரோடாக மாற்றுவதே லட்சியம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதிகெப்பிலிங்கம்பட்டி - விருதுநகர் தார் ரோடாக மாற்றுவதே லட்சியம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
கெப்பிலிங்கம்பட்டி - விருதுநகர் தார் ரோடாக மாற்றுவதே லட்சியம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
கெப்பிலிங்கம்பட்டி - விருதுநகர் தார் ரோடாக மாற்றுவதே லட்சியம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
கெப்பிலிங்கம்பட்டி - விருதுநகர் தார் ரோடாக மாற்றுவதே லட்சியம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : அக் 03, 2011 10:56 PM
காரியாபட்டி : காரியப்பட்டி ஒன்றியம் 9வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு அ.தி.மு.க., வேட்பாளர் முத்துலட்சுமி போட்டியிடுகிறார்.
அவர் கூறுகையில்: நீண்ட நாள் கோரிக்கையான கெப்பிலிங்கம்பட்டியிலிருந்து விருதுநகருக்கு 3 கி.மீ.,தூரமுள்ள வண்டிப்பாதையான குறுக்கு சாலையை தார் சாலையாக மாற்றுவதே எனது லட்சியம். இந்த வழியாக பஸ் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்வேன். வேலைக்கு செல்பவர்கள் எளிதில் சென்று வர இந்த வழித்தடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கண்மாய், ஊரணிகளை தூர்வாரி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுப்பேன். குடிநீர் தட்டுப்பாடு போக்க தாமிரபரணி குடிநீர் திட்டத்தை கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன். கெப்பிலிங்கம்பட்டி, மேல அழகியநல்லூர் கிராமத்திற்கு சமுதாயகூடம், கலையரங்கம் கட்டித் தருவேன். முதல்வர் 'ஜெ' ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பசுமை வீடு திட்டம், மிக்ஸி, கிரைண்டர், விசிறி உள்ளிட்ட பொருட்களை இப்பகுதி மக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களுக்கும் ரோடு வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்.


