/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கிராங்களை தத்தெடுத்து மேம்படுத்தும் திட்டம் முதல் கிராமமாக சுந்தரபாண்டியபுரம் தேர்வுகிராங்களை தத்தெடுத்து மேம்படுத்தும் திட்டம் முதல் கிராமமாக சுந்தரபாண்டியபுரம் தேர்வு
கிராங்களை தத்தெடுத்து மேம்படுத்தும் திட்டம் முதல் கிராமமாக சுந்தரபாண்டியபுரம் தேர்வு
கிராங்களை தத்தெடுத்து மேம்படுத்தும் திட்டம் முதல் கிராமமாக சுந்தரபாண்டியபுரம் தேர்வு
கிராங்களை தத்தெடுத்து மேம்படுத்தும் திட்டம் முதல் கிராமமாக சுந்தரபாண்டியபுரம் தேர்வு
ADDED : ஆக 13, 2011 01:27 AM
தென்காசி : ரோட்டரி சார்பில் கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்தும்
திட்டத்தில் முதல் கிராமமாக சுந்தரபாண்டியபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ரோட்டரி மாவட்டம் 3212 சார்பில் தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமாருடன்
இணைந்து கிராமங்களை தத்தெடுத்து அதை மேம்படுத்துவது என முடிவு
செய்யப்பட்டது. நடப்பாண்டு முதல் செயல்படுத்த தீர்மானம் செய்துள்ளதையடுத்து
இதன் முதற்கட்டமாக தென்காசி அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரம் கிராமம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு கிராமத்தில் மக்களுக்கு
தேவையான அத்தியாவசிய குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு சீரமைப்பு,
சுகாதாரம், மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும்
ஏற்படுத்தி அக்கிராமத்தை முழு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவதே
இத்திட்டத்தின் நோக்கமாகும். ஒரு கிராமத்தில் இத்திட்டத்தை செயல்படுத்திய
பின்னர் பல்வேறு கிராமங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நிகழ்ச்சியில் ரோட்டரி ஆளுநர் ஆறுமுகபாண்டியன், முன்னாள் ஆளுநர் நெல்லை
நாயகம், துணை ஆளுநர் ராமலிங்கம், ரோட்டரி மாவட்ட செயலாளர் டாக்டர்
ஷேக்சலீம், சுந்தரபாண்டியபுரம் டவுன் பஞ்., தலைவர் சங்கரபாண்டியன், நந்து
(எ) அருணாசலம், சமக மாவட்ட செயலாளர் தங்கராஜ் மற்றும் ரோட்டரி சங்க
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கிராமத்திற்கு தேவையான வசதிகளை ஆய்வு
செய்தனர். சுந்தரபாண்டியபுரத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து
முதற்கட்ட அறிக்கை தயாரிப்பது, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள்
செய்யவுள்ளதாகவும், சாலைகளை மேம்படுத்தும் பணி உடனடியாக துவங்கப்பட
உள்ளதாகவும் மாவட்ட ஆளுநர் ஆறுமுகபாண்டியன் கூறினார்.


