Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வீரணாமூர் ஊராட்சியில் அதிகாரிகள் விசாரணை

வீரணாமூர் ஊராட்சியில் அதிகாரிகள் விசாரணை

வீரணாமூர் ஊராட்சியில் அதிகாரிகள் விசாரணை

வீரணாமூர் ஊராட்சியில் அதிகாரிகள் விசாரணை

ADDED : ஆக 18, 2011 01:00 AM


Google News

செஞ்சி : வீரணாமூர் ஊராட்சியில் முறைகேடு புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் வீரணாமூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில் முறைகேடு நடந்திருப் பதாக தங்கராஜ் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று விழுப்புரம் உதவி திட்ட அலுவலர்கள் ஜெயபால், சண்முகம் நேரில் விசாரணை நடத்தினர். இவர்கள் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி உதவியாளர் கணேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஊராட்சியில் நடந்த வேலை உறுதி திட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தனர். விசாரணையின் போது பி.டி.ஓ.,க்கள் நடராஜன், கலியமூர்த்தி உடனிருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us