/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக., அமோக வெற்றி பெறும் : மாவட்ட செயலாளர் கணிப்புஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக., அமோக வெற்றி பெறும் : மாவட்ட செயலாளர் கணிப்பு
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக., அமோக வெற்றி பெறும் : மாவட்ட செயலாளர் கணிப்பு
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக., அமோக வெற்றி பெறும் : மாவட்ட செயலாளர் கணிப்பு
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக., அமோக வெற்றி பெறும் : மாவட்ட செயலாளர் கணிப்பு
கடையநல்லூர் : 'நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சரித்திரம் காணும் வெற்றியை பெறும்' என மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.
கடையநல்லூர் யூனியன் திரிகூடபுரம் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் சண்முகசுந்தரி, சொக்கம்பட்டி வேட்பாளர் ஜீவிதா, புன்னையாபுரம் வேட்பாளர் சமுத்திரக்கனி, மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் இசக்கியம்மாள், ஊர்மேலழகியான் ஒன்றிய கவுன்சில் வேட்பாளர் செல்வி, நயினாரகரம் வேட்பாளர் சாந்தி ஆகியோரை ஆதரித்து தேமுதிக சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கவுன்சில் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டுகளை சேகரித்தார்.
பிரசாரத்தின் போது கடையநல்லூர் ஒன்றிய தேமுதிக பொறுப்பாளர் திரிகூடபுரம் செந்தில்குமார், சொக்கம்பட்டி வெள்ளத்துரை, வலசை லிங்கம், திரிகூடபுரம் பழனி முருகன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள், கிளை அமைப்பு நிர்வாகிகள் உடன் சென்றனர்.


