Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/கொள்ளையர்களை அரிவாளால் வெட்டிய வீரப்பெண்

கொள்ளையர்களை அரிவாளால் வெட்டிய வீரப்பெண்

கொள்ளையர்களை அரிவாளால் வெட்டிய வீரப்பெண்

கொள்ளையர்களை அரிவாளால் வெட்டிய வீரப்பெண்

ADDED : ஆக 22, 2011 12:24 AM


Google News
தேனி : வீடு புகுந்து நகைகளை பறித்த கொள்ளையர்களிடம் போராடிய பெண், அவர்களிடம் இருந்த அரிவாளை பறித்து கொள்ளையனை வெட்டியதால், கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம்,பி.டி.ஆர்.காலனியை சேர்ந்த சர்தார் அகமது மனைவி பரக்கத்நிஷா(53). நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் வீட்டிற்குள் புகுந்தனர். அதில் ஒருவன், பரக்கத்நிஷாவின் மகள் அலிமாபானு படுத்திருந்த அறைக்குள் சென்று, அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் செயினை பறித்த போது,அலிமாபானு கூச்சலிட்டார். கொள்ளையனை பிடிக்க ஓடி வந்த பரக்கத்நிஷாவை, அரிவாளுடன் காத்திருந்த மற்றொரு கொள்ளையன் தடுத்தான். அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்தவன், அரிவாளால் வெட்டினான். இதில் பரக்கத்நிஷாவிற்கு கைவிரலில், காயம் ஏற்பட்டது. சுதாரித்துக்கொண்டவர், திருடனுடன் போராடினார். அவனிடம் இருந்த அரிவாளை பறித்து, கொள்ளையனை திருப்பி வெட்டினார். தோள்பட்டையில், இரண்டு முறை வெட்டியதால், தப்பித்தால் போதும் என கையில் கிடைத்த ஐந்தரை பவுன் நகைகளுடன், கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அதற்குள் பரக்கத்நிஷாவின் மருமகன் அக்பர் அலி, எழுந்து துரத்திய போது, காலில் காயம் ஏற்பட்டது. பரக்கத்நிஷாவும், அக்பர் அலியும் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தமபாளையம் போலீசார் தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us