கருணை மனு மீது 11 ஆண்டுநடவடிக்கை தகவல் பெற முடிவு
கருணை மனு மீது 11 ஆண்டுநடவடிக்கை தகவல் பெற முடிவு
கருணை மனு மீது 11 ஆண்டுநடவடிக்கை தகவல் பெற முடிவு
வேலூர்:''ராஜிவ் கொலையாளிகளின் கருணை மனுக்கள் மீது, 11 ஆண்டுகளாக ஜனாதிபதி அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என, வழக்கறிஞர் திலீபன் கூறினார்.வேலூர் மத்திய சிறையில், ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு, செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாதாரணமாக, இதற்கு 30 நாள் தேவை.ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 7 ( 1 ) படி, அவசர மனு தாக்கல் செய்தால், ஐந்து நாளில் பதில் வந்து விடும். இதற்கான முயற்சியில், 15 வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, இவர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர்'' என்றார்.இதே போல, மும்பை முன்னாள் நீதிபதி சுரேஷ் என்பவர் மூன்று பேரையும் பார்க்க மனு கொடுத்த போதும், சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.


