/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் "நாக்' கமிட்டி ஆய்வு நாளை ஆரம்பம்பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் "நாக்' கமிட்டி ஆய்வு நாளை ஆரம்பம்
பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் "நாக்' கமிட்டி ஆய்வு நாளை ஆரம்பம்
பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் "நாக்' கமிட்டி ஆய்வு நாளை ஆரம்பம்
பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் "நாக்' கமிட்டி ஆய்வு நாளை ஆரம்பம்
திருநெல்வேலி : பேட்டை ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நாளையும் (12ம் தேதி), 13ம் தேதியும் 'நாக்' கமிட்டியினர் ஆய்வு செய்கின்றனர்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்த அறிக்கை பல்கலைக் கழக மானிய குழுவிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. பல்கலைக் கழக மானிய குழு இதனை மதிப்பீடு செய்து கல்லூரிக்கு வேண்டிய நிதி ஒதுக்கீடு உட்பட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பேட்டை ராணி அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில் 'நாக்' கமிட்டி நாளையும் (12ம் தேதி), நாளை மறுநாளும் (13ம் தேதி) ஆகிய 2 நாட்கள் ஆய்வு செய்கிறது. ஒரிசா, விசாகப்பட்டினம், பெங்களூரு மாநிலங்களை சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மற்றும் பேட்டை ராணி அண்ணா மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ஆஷா மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் செய்துள்ளனர்.


