அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை ஏரியில் உள்ள ஆஞ்சநேயருக்கு திருத்தளிகை கண்டருளல் உற்சவம் நடந்தது.
,வலூர்பேட்டையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மகோற்சவம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடந்தது. மாலை 5.30 மணிக்கு ஏரியில் ஆணைக்கால் பாறையில் அமைந்துள்ள ஸ்ரீராமதூத ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் திருத்தளிகை கண்டருளல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


