/உள்ளூர் செய்திகள்/சேலம்/முன்மாதிரி வார்டாக மாற்றுவேன்அ.தி.மு.க., வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்முன்மாதிரி வார்டாக மாற்றுவேன்அ.தி.மு.க., வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்
முன்மாதிரி வார்டாக மாற்றுவேன்அ.தி.மு.க., வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்
முன்மாதிரி வார்டாக மாற்றுவேன்அ.தி.மு.க., வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்
முன்மாதிரி வார்டாக மாற்றுவேன்அ.தி.மு.க., வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்
ADDED : அக் 12, 2011 02:26 AM
சேலம்: சேலம் மாநகராட்சி, 35வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளரான கோகிலவாணி,
வார்டுக்குட்பட்ட ராஜகணபதி தெரு, ஜோதி கிழக்கு தெரு, புதுத்தெரு,
பொன்னம்மாபேட்டை, கார்பெட் தெரு, திப்பு நகர், ரயில்வே ஸ்டேஷன் தெற்கு
பகுதி, ஜோதி மேற்கு தெரு, அவ்வை தெரு, தேவாங்கர் தெரு, நவாப் நகர், சாலை
குட்டை தெரு, அங்கம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம்
மேற்கொண்டார்.பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:சேலம் மாநகராட்சி, 35வது
வார்டில் அனைத்து பகுதிகளிலும் மின்சார கம்பங்கள் பொருத்தப்படும். அந்தந்த
பகுதியில் மக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை
எடுக்கப்படும். திப்பு நகர், ரயில்வே லைன் பகுதியில், கான்கிரீட் ரோடு,
மின் வசதி, அனைத்து தெருக்களிலும் அமைத்து தரப்படும். குமரன் தெரு,
பாரதியார் தெரு, பாலாஜி நகர் தெருக்களை உயர்த்தி, அந்த பகுதியில்
நீர்நிலைகள் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்.
பொன்னம்மாபேட்டை கார்பெட் தெருவில் உள்ளவர்களின் குடிநீர்
தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும். அனைத்து தெருக்களிலும் குடிநீர்
வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்குகள் முழுமையாக
செயல்படுத்தப்படும். இந்த வார்டை முன்மாதிரி வார்டாக
மாற்றிக்காட்டுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.பிரச்சாரத்தின் போது,
நிர்வாகிகள் ராஜா, பன்னீர்செல்வம், நாகராஜன், மஞ்சுளா, விஜயாராணி,
மாணிக்கம், சரவணன், முருகேசன், பிரகாஷ், பாத்திமா, தேவா, மோகன் மற்றும்
பலர் கலந்து கொண்டனர்.


