Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/போதிய பஸ் வசதியின்றி செஞ்சேரிபுத்தூர் மக்கள் தவிப்பு

போதிய பஸ் வசதியின்றி செஞ்சேரிபுத்தூர் மக்கள் தவிப்பு

போதிய பஸ் வசதியின்றி செஞ்சேரிபுத்தூர் மக்கள் தவிப்பு

போதிய பஸ் வசதியின்றி செஞ்சேரிபுத்தூர் மக்கள் தவிப்பு

ADDED : ஜூலை 18, 2011 11:57 PM


Google News

சுல்தான்பேட்டை : செஞ்சேரிபுத்தூரில் இருந்து பல்லடம், திருப்பூர், உடுமலைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல், பொதுமக்கள் தவிக்கின்றனர்.பல்லடத்தில் இருந்து உடுமலைக்கு செல்லும் பிரதான ரோட்டில் 20வது கி.

மீ.,தூரத்தில் செஞ்சேரிபுத்தூர் உள்ளது. செஞ்சேரிப்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பல்லடம் பகுதியில் உள்ள விசைத்தறிகள் மற்றும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களாக உள்ளனர். சிலர், உடுமலையில் உள்ள நூல்மில்கள், காற்றாலைகளில் பணி செய்கின்றனர்.



இத்தொழிலாளர்கள், செஞ்சேரிபுத்தூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து பல்லடம், திருப்பூர் மற்றும் உடுமலைக்கு காலையில், வேலைக்கு வருகின்றனர்; வேலை முடிந்தபின், மாலையில் தங்களின் சொந்த ஊர் திரும்புகின்றனர்; காலை, மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.செஞ்சேரிபுத்தூர் வழியாக வரும் பஸ்களில் கூட்டத்தில் நெருக்கியடித்து கொண்டும், படிக்கட்டுகளில் ஆபத்தாக தொங்கியபடியும் பயணித்து, ஊர்வந்து சேர்க்கின்றனர்.போதிய பஸ் வசதி இல்லாமல், உயிரை பணயம் வைத்து, பயணிக்கும் அவலம் தீர, செஞ்சேரிபுத்தூருக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us