Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அனந்தபுரத்தில் கண் சிகிச்சை முகாம்

அனந்தபுரத்தில் கண் சிகிச்சை முகாம்

அனந்தபுரத்தில் கண் சிகிச்சை முகாம்

அனந்தபுரத்தில் கண் சிகிச்சை முகாம்

ADDED : ஆக 26, 2011 12:20 AM


Google News

செஞ்சி : அனந்தபுரத்தில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அனந்தபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. நகர செயலாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய செயலாளர் தயாநிதி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர். ஞானவேல் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் செஞ்சி சிவா முகாமை துவக்கி வைத்தார். செஞ்சி நகர செயலாளர் பழனி, மகளிரணி மாவட்ட துணை செயலாளர் சுதாபாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை ஸ்ரீரமண மகரிஷி கண் மருத்துவமனை டாக்டர்கள் பொதுமக்கள் 200 பேருக்கு சிகிச்சை அளித்தனர். இதில், 35 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us