Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசி ஒன்றியத்தில் பெண்களுக்கு 18 ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு

சிவகாசி ஒன்றியத்தில் பெண்களுக்கு 18 ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு

சிவகாசி ஒன்றியத்தில் பெண்களுக்கு 18 ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு

சிவகாசி ஒன்றியத்தில் பெண்களுக்கு 18 ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு

ADDED : செப் 24, 2011 10:05 PM


Google News

சிவகாசி : சிவகாசி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில் வெள்ளூர், வாடி, மங்களம், எம்.புதுப்பட்டி ஊராட்சிகள் ஆதிதிராவிடர் பெண், அனுப்பங்குளம், விளாம்பட்டி, நெடுங்குளம், நமஸ்கரித்தான்பட்டி, காளையார்குறிச்சி, ஆலமரத்துப்பட்டி ஊராட்சிகள் ஆதிதிராவிடர் பொது பிரிவு, விஸ்வநத்தம், வேண்டுராயபுரம், வெள்ளையாபுரம், வடபட்டி, வடமலாபுரம், செங்கமலநாச்சியார்புரம், ரங்கபாளையம், பள்ளபட்டி, நிறைமதி, நாரணாபுரம், கொத்தனேரி, கிச்சநாயக்கன்பட்டி, எரிச்சநத்தம், ஆனையூர் ஊராட்சிகள் பெண்கள் பொது பிரிவுக்கு ஓதுக்கப்பட்டுள்ளது. ஜமீன்சல்வார்பட்டி, ஊராம்பட்டி, தேவர்குளம், தச்சகுடி, சுக்கிரவார்பட்டி, சித்துராஜபுரம், செவலூர், செங்கமலப்பட்டி, சாமிநத்தம், புதுக்கோட்டை, பூலாவூரணி, பெரியபொட்டல்பட்டி, நடுவபட்டி, நடையனேரி, மேலஆமத்தூர், மாரனேரி, லட்சுமியாபுரம், குமிழங்குளம், கிருஷ்ணாபுரம், கிருஷ்ணபேரி, கவுண்டம்பட்டி, கட்டச்சின்னம்பட்டி, காரிசேரி, ஈஞ்சாறு,சொக்கம்பட்டி, சொக்கலிங்கபுரம், சித்தமநாயக்கன்பட்டி, பூவநாதபுரம், ஆனைக்குட்டம், ஏ.துலுக்கப்பட்டி ஊராட்சிகள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us