/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/பறிமுதல் செய்யப்பட்ட ஊழல் அதிகாரி வீடு பள்ளிக்கூடமாக மாறியது: பீகார் அரசு அதிரடிபறிமுதல் செய்யப்பட்ட ஊழல் அதிகாரி வீடு பள்ளிக்கூடமாக மாறியது: பீகார் அரசு அதிரடி
பறிமுதல் செய்யப்பட்ட ஊழல் அதிகாரி வீடு பள்ளிக்கூடமாக மாறியது: பீகார் அரசு அதிரடி
பறிமுதல் செய்யப்பட்ட ஊழல் அதிகாரி வீடு பள்ளிக்கூடமாக மாறியது: பீகார் அரசு அதிரடி
பறிமுதல் செய்யப்பட்ட ஊழல் அதிகாரி வீடு பள்ளிக்கூடமாக மாறியது: பீகார் அரசு அதிரடி

பாட்னா: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களாவை, பீகார் அரசு, பள்ளிக்கூடமாக மாற்றியுள்ளது.
பீகார் மாநிலத்தில், 2007ம் ஆண்டில், நீர்பாசனத்துறை செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவ் சங்கர் வர்மா.
இதையடுத்து, ரூகான்பூரா குடிசைப் பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்பப் பள்ளிக்கூடம், பறிமுதல் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களாவுக்கு மாற்றப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, நாட்டிலேயே முதன்முறையாக, பீகார் மாநிலத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களா பறிமுதல் செய்யப்பட்டு, பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


