துண்டுப் பிரசுரம், போஸ்டர்கள் அச்சடிக்க அச்சகங்களில் குவிந்த வேட்பாளர்கள் கூட்டம்
துண்டுப் பிரசுரம், போஸ்டர்கள் அச்சடிக்க அச்சகங்களில் குவிந்த வேட்பாளர்கள் கூட்டம்
துண்டுப் பிரசுரம், போஸ்டர்கள் அச்சடிக்க அச்சகங்களில் குவிந்த வேட்பாளர்கள் கூட்டம்
தங்களுக்குரிய சின்னம் கிடைத்ததும் துண்டுப்பிரசுரங்களை அச்சடிப்பதற்காக, தனியார் அச்சகங்களில் குவிந்த வேட்பாளர்களின் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மற்றபடி, சுயேச்சைகளுக்கு 30 சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. இறுதிக்கட்ட பட்டியலில் தங்களுக்கு சின்னம் கிடைத்ததும், அதை மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் துண்டுப்பிரசுரம் மற்றும் போஸ்டர்களை அச்சடிக்க, வேட்பாளர்கள், அச்சகங்களுக்கு விரைந்தனர். இதனால், அங்கு கூட்டம் அலை மோதியது. ஆயிரம் துண்டுப் பிரசுரங்களுக்கு (சிங்கிள் கலர்) 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. பல வண்ணங்களில் அச்சடிக்கப்பட்ட, 'டிஜிட்டல்' பிரின்டிங் நோட்டீஸ்களுக்கு ரூ.2,000 முதல் 3,000 வரை கட்டணம் அதிகரித்தது. அங்கு உடனடியாக வேலை முடியாதவர்கள், 'டிடிபி' சென்டர்களில் விளம்பர பிரசுரங்களை தயாரித்து, அதை ஜெராக்ஸ் (நகல்) எடுத்து வாக்காளர்களுக்கு கொடுத்து, தங்கள் சின்னத்தை அறிமுகம் செய்தனர்.
மேலும் பலர், தங்களுக்குரிய சின்னங்களை நினைவுப்படுத்தம் வகையில், கைக்கடிகாரம், சங்கு, மூக்குகண்ணாடி, மை எழுதுகோல் (பேனா), என கவர்ச்சிகரமான பல பொருட்களை வாங்கி, வாக்காளர்களுக்கு பரிசாக அளிக்கத் துவங்கி விட்டனர்.
- நமது சிறப்பு நிருபர் -


