/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தி.மு.க.,வினரை ஒன்றும் செய்ய முடியாது அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆலந்தூர் பாரதி சவால்தி.மு.க.,வினரை ஒன்றும் செய்ய முடியாது அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆலந்தூர் பாரதி சவால்
தி.மு.க.,வினரை ஒன்றும் செய்ய முடியாது அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆலந்தூர் பாரதி சவால்
தி.மு.க.,வினரை ஒன்றும் செய்ய முடியாது அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆலந்தூர் பாரதி சவால்
தி.மு.க.,வினரை ஒன்றும் செய்ய முடியாது அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆலந்தூர் பாரதி சவால்
ADDED : ஆக 22, 2011 12:17 AM
விழுப்புரம் : தி.மு.க., வின் சட்டத்துறை உள்ளவரை உங்கள் ஆட்சி
அதிகாரங்களால் ஒன்றும் செய்ய முடியாது என ஆலந்தூர் பாரதி பேசினார்.
விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில் நடந்த சமச்சீர் கல்வி வெற்றி விழா
பொதுக் கூட்டத்தில் கட்சியின் சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் பாரதி
பேசியதாவது: தி.மு.க., வைப் போல் வெற்றி பெற்றவர்களுமில்லை,
தோல்வியடைந்தவர்களும் இல்லை. ஐந்தாண்டிற்கு ஒரு முறை தோல்வி அடைவது
ஆரோக்கியமானதாகவே உள்ளது. தி.மு.க., தோல்வி மக்களுக்குத் தான் இழப்பை
கொடுக்கும். கடந்த 1953ம் ஆண்டில் ராஜகோபாலாச்சாரி முதல்வராக இருந்த
காலத்திலும், ராஜாஜி காலத்திலும் கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தனர்.
இப்போது ஜெ., மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். தி.மு.க., ஆட்சி
காலத்தில் தான் அனைத்து தரப்பினரும் கல்வி பெறும் சமச்சீர் நிலை கொண்டு
வரப்பட்டுள்ளது. கடந்த 57ம் ஆண்டில் கேரளாவில் கம்யூ., கட்சியினர்
சமச்சீர் கல்வியை கொண்டு வந்ததால் அங்கு அனைவரும் படித்து சாதித்து
வருகின்றனர். தி.மு.க., வின் சட்டத்துறை உள்ளவரை உங்கள் ஆட்சி
அதிகாரங்களால் ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க.,வினர் மீதான நில
அபகரிப்பு வழக்கினை எதிர்த்து நாங்கள் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளோம்.
ஜெ., ஆட்சி காலங்களில் பழிவாங்கும் போக்குதான் தொடர்கிறது. ஜெ.,-விஜயகாந்த்
போன்றவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுத்துவிட்டு மக்கள் துன்பத்தை
அனுபவிக்கின்றனர். மீண்டும் ஆட்சிக்கு வந்து புதிய சட்டசபை கட்டடத்தில்
கருணாநிதி உட்காருவார். இவ்வாறு ஆலந்தூர் பாரதி பேசினார்.


