/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போராட வேண்டாம்; பேசியே பிரச்னையை தீர்ப்போம்!விவசாயிகளுக்கு கலெக்டர் "அட்வைஸ்'போராட வேண்டாம்; பேசியே பிரச்னையை தீர்ப்போம்!விவசாயிகளுக்கு கலெக்டர் "அட்வைஸ்'
போராட வேண்டாம்; பேசியே பிரச்னையை தீர்ப்போம்!விவசாயிகளுக்கு கலெக்டர் "அட்வைஸ்'
போராட வேண்டாம்; பேசியே பிரச்னையை தீர்ப்போம்!விவசாயிகளுக்கு கலெக்டர் "அட்வைஸ்'
போராட வேண்டாம்; பேசியே பிரச்னையை தீர்ப்போம்!விவசாயிகளுக்கு கலெக்டர் "அட்வைஸ்'
ADDED : ஜூலை 30, 2011 01:23 AM
கோவை : ''அரசுத்துறையினருடன் மோதல் போக்கைக் கடை பிடிக்க வேண்டாம்; உரிய முறையில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கலெக்டர் உறுதி அளித்தார்.
கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம், கலெக்டர் கருணாகரன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலரும், மின் வாரியத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். இதனை மறுத்து, மின் வாரிய பொறியாளர்களும் அவ்வப்போது பதிலளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கந்தசாமி பேசுகையில்,''விவசாயத்தை மேம்படுத்த வேண்டுமென்று பிரதமர் பேசுகிறார்; ஆனால், தமிழகத்தில் விவசாயத்துக்கு மின் இணைப்பு கிடைப்பது குதிரைக் கொம்பாகவுள்ளது. முந்தைய அரசு, 2 லட்சம் இணைப்புத் தர இலக்கு நிர்ணயித்தது; அதைத்தரவும் மின் வாரிய அதிகாரிகளுக்கு மனமில்லை'' என்றார். இச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வழுக்குப்பாறை பாலு பேசுகையில், ''கேஸ் நிறுவனத்தின் குழாய்களை, அதற்காகத் திட்டமிட்ட பாதையில் பதிக்காமல், விவசாய நிலங்களில் கொண்டு வருகின்றனர். கல்லூரி, பள்ளி, ஆசிரம நிர்வாகங்களின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து, இஷ்டம் போல் இந்த குழாய்ப் பாதையை மாற்றி வருகின்றனர்,'' என்றார். இதற்காக, போராட்டம் நடத்தலாம் என திட்டமிட்டிருந்ததாக அவர் கருத்துத் தெரிவித்தார். அதேபோல, கதிரவன் என்ற விவசாயி மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையைக் கண்டித்தும் பலர் பேசினர். கலெக்டர் குறுக்கிட்டு, ''அரசுத்துறையினருடன் விவசாயிகள் மோதல் போக்கைக் கடை பிடிக்க வேண்டாம்; பேசினாலே பல விஷயங்கள் சரியாகி விடும்,'' என்றார். பாலாறு பாசனப் படுகை விவசாயிகள் சங்கத்தலைவர் மெடிக்கல் பரமசிவம் பேசுகையில்,''பாலாடு படுகையிலுள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலம், கோவை மாவட்டத்திலும், மூன்றரை லட்சம் ஏக்கர் நிலம், திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளன. வரும் ஆக.15ல் தண்ணீர் திறந்து விடுவதற்குள் கால்வாய்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணியை துரிதப்படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். கொப்பரை விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது; அதனை உயர்த்துமாறு அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார். பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிர்வாகத்தால் ஏற்படும் நஷ்டத்தையும் அவர் விவரித்தார். தொண்டாமுத்தூரில் காட்டு யானை ஊடுருவலைக் கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு 'சியர்ச் லைட்' வழங்க வேண்டுமென்ற கோரிக்கையையும் வனத்துறை ஏற்கவில்லை என்று கதிரவன் என்ற விவசாயி குற்றம்சாட்டினார். அரசிடமிருந்து அனுமதியும், நிதியும் வந்தவுடன் அவை வழங்கப்படுமென்று ரேஞ்சர் பார்த்திபன் தெரிவித்தார். அத்திப்பாளையம் துரைசாமி பேசுகையில்,''யானைகளின் வழித்தடங்களில் ஆன்மிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் 21 பெரிய கட்டடங்கள் இருப்பதாக வனத்துறை கூறுகிறது. அவற்றை அகற்ற வேண்டும்; அல்லது அவர்களையே யானைகளுக்குரிய உணவு மற்றும் குடிநீர்த் தொட்டி அமைத்துத்தர உத்தரவிட வேண்டும்,'' என்றார். துரைசாமி என்ற விவசாயி பேசுகையில், ''ஆழியாறு பாசனப்படுகையில், ஒரு மடை விட்டு ஒரு மடை விவசாயத்தை நடைமுறைப்படுத்தாத காரணத்தால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். நில அளவைத்துறை மீது, ஏராளமான விவசாயிகள் அடுக்கடுக்காக பல்வேறு புகார்களை அடுக்கினர். சில 'சர்வேயர்'கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர். கலெக்டர் பதிலளிக்கையில், ''தவறு செய்த சிலருக்கு ஏற்கனவே எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. மறுபடியும் எச்சரிப்போம்; இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.


