Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூர் நகராட்சித் தலைவர் பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு

அரியலூர் நகராட்சித் தலைவர் பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு

அரியலூர் நகராட்சித் தலைவர் பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு

அரியலூர் நகராட்சித் தலைவர் பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு

ADDED : செப் 10, 2011 03:57 AM


Google News

அரியலூர்: அரியலூர் நகராட்சி தலைவி விஜயலெக்ஷ்மி செல்வராஜ் விடுத்த அறிக்கை:கடந்த 2006ம் ஆண்டு அரியலூர் நகராட்சியின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல், கடந்த ஐந்து ஆண்டுகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட, மக்கள் நலப்பணிகள் வாயிலாக நான் மன நிறைவடைகிறேன்.அரியலூர் நகராட்சி பகுதியில், 27.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள், 7.89 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் தேசிய ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டம்.சிறப்புச்சாலைகள் 43 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட திட்டம், ஒரு கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும், அரியலூர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி.ரூபாய் 30 லட்சம் செலவில் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், செயல்படுத்தப்பட்ட திட்ட பணிகள் உள்பட, பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.நகராட்சி தலைவருக்கான எனது பணிக்காலத்தில், எனக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கி உதவி புரிந்த, கலெக்டர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகள், நகராட்சி துணை தலைவர், நகராட்சியின் அனைத்து கவுன்சிலர்கள், நகராட்சியின் நிர்வாக அலுவலர்கள், நகராட்சியின் அனைத்து பணியாளர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.











      Our Apps Available On




      Dinamalar

      Follow us