/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குளிர் சாதன வசதி இல்லை போலீசார் திண்டாட்டம்குளிர் சாதன வசதி இல்லை போலீசார் திண்டாட்டம்
குளிர் சாதன வசதி இல்லை போலீசார் திண்டாட்டம்
குளிர் சாதன வசதி இல்லை போலீசார் திண்டாட்டம்
குளிர் சாதன வசதி இல்லை போலீசார் திண்டாட்டம்
ADDED : ஆக 03, 2011 11:26 PM
சிவகாசி : அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர் உடலை பாதுகாக்க குளிர்சாதன வசதி இல்லாததால் உடலை பாதுகாப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது.
சிவகாசி ஆஸ்பத்திரியில் திடீரென ஏற்படும் பட்டாசு விபத்துகளில் ஒரே நாளில் பலரது உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. விபத்து, கொலை வழங்குகளில் இறந்தவர்களை பிரேத பரிசோதனை முடித்து, உடனே அடக்கம் செய்ய முடிவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோரி ஏற்படும் போராட்டம், சட்டம் -ஒழுங்கு பிரச்னையால் நாட்கள் கணக்கில் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை சிவகாசியில் ஏற்படுகிறது. இந்நிலையில், இறந்தவர் உடல் குளிர்தான வசதி இல்லாத கட்டடத்தில் வைத்திருக்கும் போது உடல் கெட்டு, மற்றவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படுகிறது. பிணத்தை பாதுகாக்கும் அளவில் விருதுநகர் ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறைகளில் குளிர்சாதன வசதி இல்லை. அனாதை பிணம், கொலை வழக்கு பிணங்களை பாதுகாக்க தனியார் வசமுள்ள குளிர்சாதன பெட்டிகளையும் போலீசாருக்கு கொடுப்பது இல்லை.
இச் சூழ்நிலையில் கடந்தவாரம் சிவகாசியில் கொலை செய்யப்பட்ட வீரசிங்கம் அடையாளம் தெரியாததால், அவரது உடலை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் கேட்டும் குளிர்சாதன பெட்டி கிடைக்கவில்லை. பின்னர் போலீசார் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து உடலை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பாதுகாத்தனர். இப்படி சிக்கலான ஒவ்வொரு வழக்கிலும் இறந்தவர் உடலை பாதுகாக்க போலீசார் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க சிவகாசி, விருதுநகர் ஆஸ்பத்திரிகளில் குளிர்சாதன வசதியுடன் பிரேத பரிசோதனை அறை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


