/உள்ளூர் செய்திகள்/மதுரை/சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்புசில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு
ADDED : ஆக 29, 2011 12:08 AM
மதுரை : மதுரையில் பலசரக்கு சில்லரை வணிகர்கள் சங்க ஆண்டு விழா தலைவர் பால்ராஜ் தலைமையில் நடந்தது.
செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இஸ்ரோவின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் பரிசு வழங்கினார். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு குறித்து சுதேசி விழிப்புணர்வு இயக்க அமைப்பாளர் சீனிவாசன் பேசினார்.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது; இதற்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும். மத்திய கலப்பட தடைச் சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்படும் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்ட விதிமுறைகளை வணிகர்களுடன் ஆலோசிக்க வேண்டும். மாநகராட்சியின் டி அண்ட் ஓ உரிமம் பெறுவதற்கான நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2011-12ம் ஆண்டின் புதிய தலைவராக பால்ராஜ், செயலாளராக ஜெயராம், பொருளாளராக கருப்பையா மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


