ADDED : அக் 11, 2011 02:34 AM
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.
காங்., வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து, முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஜிப்மர் குடியிருப்புப் பகுதி மற்றும் காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வேனில் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் நேரு, வைத்தியநாதன் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் உடன் சென்றனர். முதல்வர் சென்ற வேனை தொடர்ந்து, என்.ஆர்.காங்., கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் மோட்டார் சைக்கிளில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


