/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரேஷன் கடை என்றாலே எடை குறைவு இந்த எண்ணம் மக்களிடம் படிந்துள்ளது ராமமூர்த்தி எம்.எல்.ஏ., பேச்சுரேஷன் கடை என்றாலே எடை குறைவு இந்த எண்ணம் மக்களிடம் படிந்துள்ளது ராமமூர்த்தி எம்.எல்.ஏ., பேச்சு
ரேஷன் கடை என்றாலே எடை குறைவு இந்த எண்ணம் மக்களிடம் படிந்துள்ளது ராமமூர்த்தி எம்.எல்.ஏ., பேச்சு
ரேஷன் கடை என்றாலே எடை குறைவு இந்த எண்ணம் மக்களிடம் படிந்துள்ளது ராமமூர்த்தி எம்.எல்.ஏ., பேச்சு
ரேஷன் கடை என்றாலே எடை குறைவு இந்த எண்ணம் மக்களிடம் படிந்துள்ளது ராமமூர்த்தி எம்.எல்.ஏ., பேச்சு
ADDED : ஆக 09, 2011 02:44 AM
விழுப்புரம் : ரேஷன் கடை விற்பனையாளர்களின் குறைகளை அமைச்சரிடத்தில் கூறி நிவர்த்தி செய்வேன் என ராமமூர்த்தி எம்.எல்.ஏ., பேசினார்.விக்கிரவாண்டி ஒன்றிய ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.விக்கிரவாண்டி அரசு பள்ளியில் நடந்த கூட்டத்தில் ராமமூர்த்தி எம்.எல்.ஏ., பேசியதாவது:பொதுமக்களிடத்தில் ரேஷன் கடை என்றாலே எடை குறைவு என்ற எண்ணம் தான் மேலாங்கியுள்ளது.
உயர் அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு விற்பனையாளர் பாதிக்கப்படு வது பொதுமக்களுக்கு தெரிவதில்லை. ரேஷன் கடைக்கு எடை குறைவாக பொருட்களை அனுப்புவதாகவும், தேவையற்ற பொருட்களை விற்பனை செய்ய திணிக்கப்படுவதாக விற்பனையாளர்கள் தரப்பில் கூறுகின்றனர்.அரசு தரும் பொருட்களை சரியான முறையில் பொதுமக்களை சென்றடைய செய்வது விற்பனையாளர்களின் கடமை. விற்பனையாளர்களின் குறைகள் அனைத்தும் கலெக்டர் மற்றும், துறை அமைச்சரிடம் கூறி விநியோகத்தில் உள்ள குறைகளை தீர்க்க தக்க நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு ராமமூர்த்தி எம்.எல்.ஏ., கூறினார்.கூட்டத்தில் வங்கி கள மேலாளர் மனோகரன், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் சங்கரன், வட்ட செயலாளர் முருகன், அ.தி.மு.க., நிர்வாகிகள் முகமதுஷெரீப், ஜெனார்த்தனம், பிரகாஷ், தே.மு.தி.க., நகர செயலா ளர் சசிக்குமார், துணை செயலாளர் சிவா கலந்து கொண்டனர்.


