ADDED : ஆக 03, 2011 01:05 AM
ஊட்டி : ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணெய் சில்லரை விற்பனை விலை 13.90 முதல் 14.20 ரூபாயாக உயர்த்த மாநில அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரியில் பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணெய் தற்போது லிட்டர் ஒன்றுக்கு 11.60 முதல் 11.90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், லிட்டர் ஒன்றுக்கு மானியமாக 60 காசுகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விலையை ஆக.,1ம் தேதி முதல் அதிகரித்துள்ளதன் விளைவாக, லிட்டருக்கு 13.90 முதல் 14.20 ரூபாயாக உயர்த்த அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.


