Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தாலுகா தலைமையிடத்தில் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

தாலுகா தலைமையிடத்தில் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

தாலுகா தலைமையிடத்தில் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

தாலுகா தலைமையிடத்தில் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

ADDED : ஜூலை 25, 2011 10:56 PM


Google News

சிதம்பரம் : முன்குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பயன் பெறும் வகையில் தாலுகாக்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்து உழவர் முன்னணி மாவட்ட துணை செயலாளர் சரவணன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:கடலூர் மாவட்டத்தில் முன் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை துவங்கியுள்ளனர்.

நெல் வியாபாரிகள் (தனியார்) 62 கிலோ எடை கொண்ட நெல் மூட்டைக்கு 500 ரூபாய் மட்டும் விலை நிர்ணயம் செய்துள்ளனர். இதனால் அரசு நிர்ணயித்த விலை கூட கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தாலுகா தலைமையிடங்களில் நெல்கொள் முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us