தவித்த குழந்தைகளுக்கு குவிந்த உதவிகள் : "தினமலரால்' நம்பிக்கை பிறந்துள்ளது
தவித்த குழந்தைகளுக்கு குவிந்த உதவிகள் : "தினமலரால்' நம்பிக்கை பிறந்துள்ளது
தவித்த குழந்தைகளுக்கு குவிந்த உதவிகள் : "தினமலரால்' நம்பிக்கை பிறந்துள்ளது
அருப்புக்கோட்டை : அப்பா, அம்மாவை இழந்த குழந்தைகளுக்கு 'தினமலர்' வாசக நெஞ்சங்களின் உதவிகளால் குழந்தைகள் நெகிழ்ச்சியடைந்தனர்.திக்கு தெரியாமல் இருந்த எங்களுக்கு வாழ வேண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அருப்புக்கோட்டை திருமேனி மடத்து தெருவில் அப்பா, அம்மாவை இழந்த மூன்று குழந்தைகள் என்ற தலைப்பில் கடந்த 20 ம் தேதி தினமலர் இதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தியை படித்த வாசக நெஞ்சங்கள் காலையிலேயே மதுரை தினமலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு குழந்தைகள் பற்றிய விபரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், வத்திராயிருப்பு, திருமங்கலம், சிவகாசி உட்பட பல ஊர்களில் உள்ள தொண்டு நிறுவனங்கள், டிரஸ்ட் அமைப்புகள், தனிநபர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு தேவையான படிப்பு மற்றும் வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தனர். ஒரு சிலர் நேரடியாக சென்று குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்தனர்.
மூத்த பெண் ராஜலட்சுமி கூறியதாவது: நாங்கள் அனாதைகளாகி விட்டோம் என்று நினைத்தோம். ஆனால், தினமலர் நாளிதழில் எங்களை பற்றிய செய்தியை படித்து விட்டு பல இடங்களிலிருந்து ஏராளமானோர் எங்களை போனிலும், நேரிடையாகவும் விசாரித்து உதவிகளை செய்ததில் எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி. திக்கு தெரியாமல் இருந்த எங்களுக்கு நாங்கள் நல்ல முறையில் படித்து வாழ்ந்து காண்பிப்போம் என்ற நம்பிக்கை பிறந்து உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.


