Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி தீவிரம்

வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி தீவிரம்

வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி தீவிரம்

வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி தீவிரம்

ADDED : செப் 07, 2011 12:38 AM


Google News
உடுமலை : உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 43 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மற்றும் ஓட்டுச்சாவடி மையங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலையொட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 53 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர்கள் ஓட்டளித்து செல்ல வசதியாக பாதைகள் அமைக்கப்பட்டும், மின்வசதி உள்ளிட்டவை சரிபார்க்கும் வகையில், ஆய்வு செய்யப்படுகிறது. தற்போதுள்ள வாக்காளர் பட்டியலின் படி, 43 ஆயிரத்து 390 எண்ணிக்கை உள்ளது. இந்த பட்டியலின் படி வாக்காளர்கள் உள்ள விவரம்சரி பார்க்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக, 44 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக அங்கன்வாடி, சத்துணவு அமைப்பாளர்கள், நகராட்சி துப்புரவுப்பணி மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 53 ஓட்டுச்சாவடிகளில், 44 பாகங்களில் உள்ள வாக்காளர்களின் மொபைல்போன் மற்றும் தொலைபேசி எண்கள், இ-மெயில், ஐ.டி., போன்ற விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us