ADDED : ஜூலை 14, 2011 12:06 AM
உளுந்தூர்பேட்டை : பரிந்தல் மேட்டுகாலனியில் பள்ளி கட்டடம் திறப்பு விழா நடந்தது.
உளுந்தூர்பேட்டை அடுத்த பரிந்தல் மேட்டுகாலனியில் 7.5 லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை குமரகுரு எம்.எல்.ஏ., திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் வளர்மதி முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., இளைஞர் பாசறை ஒன்றிய துணை செயலாளர் பாலு வரவேற்றார். முன்னாள் அ.தி.மு.க., மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் குமார், சேகர், ராஜ்குமார், வையாபுரி, கிருஷ்ணமூர்த்தி, சுப்ராயன், ராமானுஜம், ஞானமூர்த்தி,கேசவன் கலந்து கொண்டனர்.


