அரசு - தி.மு.க., வழக்கறிஞர்கள் மோதல்
அரசு - தி.மு.க., வழக்கறிஞர்கள் மோதல்
அரசு - தி.மு.க., வழக்கறிஞர்கள் மோதல்
ADDED : செப் 05, 2011 06:00 PM
விழுப்புரம்: விழுப்புரம் கோர்ட் வளாகத்தில் அரசு மற்றும் தி.மு.க., வழக்கறிஞர்கள் மோதல் ஏற்பட்டது.
இதனால் பொன்முடி மீதான ஜாமீன் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நில மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து அவர் ஜாமீன்கேட்டு விழுப்புரம் ஜே.எம்.1 கோர்ட்டில் தி.மு.க., வழக்கறிஞர் சுப்ரமணியன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். இன்று ஜாமின் வழங்க வேண்டும் எனகோரினர். இதற்கு அரசு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களை தாக்க முயற்சி செய்தனர். தகவல் அறிந்த பொன் சிவா தலைமையிலான அரசு வழக்கறிஞர்களுக்கும் தி.மு.க., வழக்கறிஞர்களுக்கும் இடையே நீதிபதி மோதல் ஏற்பட்டது. இதனால் உஷாரடைந்த நீதிபதி மனோஜ்குமார், பொன்முடி ஜாமின் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார். கோர்ட் வளாகத்தில் நீதிபதி முன்னிலையில் வக்கீல்கள் மோதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


