Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/எரிந்த நிலையில் இருவர் பிணம்

எரிந்த நிலையில் இருவர் பிணம்

எரிந்த நிலையில் இருவர் பிணம்

எரிந்த நிலையில் இருவர் பிணம்

ADDED : செப் 14, 2011 01:25 AM


Google News
வேலூர் : ஆற்காடு அருகே, எரிந்த நிலையில் விவசாயி மற்றும் ஒரு பெண் பிணமாக கிடந்தனர்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த அனத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனிசாமி, 45. இவரது மனைவி விஜயா, 35. இவர்களுக்கு திவ்யா, தீபா என்ற மகள்களும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர்.முனிசாமி, அவரது நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். கடந்த 10ம் தேதி, முனிசாமியின் மனைவி விஜயா, தன் மகன், மகள்களை அழைத்து கொண்டு, கண்ணமங்கலத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை, முனிசாமி வீட்டிலிருந்து அதிகளவு புகை வந்தது.தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீசார், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு, முனிசாமியும், அதே ஊரைச் சேர்ந்த பாபுவின் மனைவி சுமதி, 35, என்பவரும் நிர்வாணமாக கருகிய நிலையில், பிணமாக கிடந்தனர்.சுமதி, தன் மகன்களுடன் அதே ஊரில் வசித்து வந்தார். இவரது கணவர் பாபு, சென்னையில் மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்கிறார். முனிசாமிக்கும், சுமதிக்கும் இருந்த கள்ள தொடர்பால், இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us