/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/உயர்நிலைப்பள்ளி வரும் : வேட்பாளர் எம்.ராஜா உறுதிஉயர்நிலைப்பள்ளி வரும் : வேட்பாளர் எம்.ராஜா உறுதி
உயர்நிலைப்பள்ளி வரும் : வேட்பாளர் எம்.ராஜா உறுதி
உயர்நிலைப்பள்ளி வரும் : வேட்பாளர் எம்.ராஜா உறுதி
உயர்நிலைப்பள்ளி வரும் : வேட்பாளர் எம்.ராஜா உறுதி
ADDED : செப் 27, 2011 09:23 PM
சிவகங்கை : ''குமாரபட்டி ஊராட்சி தலைவரானால் அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்த பாடுபடுவேன்,'' என, தலைவர் வேட்பாளர் எம்.ராஜா கூறினார்.
சிவகங்கை ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் எம்.ராஜா, உதவி தேர்தல் அலுவலர் மாலதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது: குமாரபட்டி அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்த பாடுபடுவேன். இங்கு, கூட்டுறவு வங்கி கிளை துவக்கப்படும். காராம்போடைக்கு ரோடு வசதி செய்யப்படும். ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித்தரப்படும். சேந்தி உடையநாதபுரம் கிராமத்தில் மயானசாலை மேம்படுத்தப்படும். என்றார். இந்திய கம்யூ., ஒன்றிய குழு பாண்டியன், திருவள்ளுவன், மச்சக்காளை, சுந்தரராஜன், கிருஷ்ணன் உடனிருந்தனர்.


