/உள்ளூர் செய்திகள்/திருச்சி/வயலூர் முருகன் கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழாவயலூர் முருகன் கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா
வயலூர் முருகன் கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா
வயலூர் முருகன் கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா
வயலூர் முருகன் கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா
ADDED : ஜூலை 25, 2011 01:55 AM
திருச்சி: வயலூர் முருகன் கோவில் உட்பட திருச்சியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று ஆடிக்கிருத்திகை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கிருத்திகை எனப்படும் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர் முருகப்பெருமான்.
சூரபத்மனை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய ஆறு தீப்பொறிகளில் தோன்றிய கார்த்திகேயனை, ஆறு கார்த்திகை பெண்கள் சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். அவர்களின் பெருமையை போன்றும் வகையில் கிருத்திகை விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் பிரசித்தி பெற்றது.
ஆடிக்கிருத்திகை அன்று, தடைகளை தகர்தெறியும் முருகனுக்கு, காவடிகள், அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் செய்வது முருகப் பக்தர்களின் வழக்கம். இன்று (25ம் தேதி) ஆடிக்கிருத்திகையொட்டி, திருச்சியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது.
வயலூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 11 மணிக்கு பால் காவடி, அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில் சிங்கார வடிவேலர் எழுந்தருளி வீதியுலா வருகிறார். இரவு 10.30 மணிக்கு பிரயாச்சித்த அபிஷேகம், அர்த்த ஜாம பூஜை நடக்கிறது. அதுவரை நடை திறந்திருக்கும். பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.
திருவானைக்கோவில் பாலதண்டாயுதபாணி சன்னதி, மேலக்கொண்டயம்பேட்டை சுக்ரான் கோவில், ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் உள்ளிட்ட திருச்சியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடக்கவிருக்கிறது. இதைத்தவிர, விராலிமலை முருகன் கோவில், புதுக்கோட்டை குமரமலை முருகன் கோவில் உள்ளிட்ட சிறப்புமிக்க மலைக்கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் இன்று நடக்கிறது.