Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கரும்பில் செம்மை சாகுபடி முறை அறிமுகம்

கரும்பில் செம்மை சாகுபடி முறை அறிமுகம்

கரும்பில் செம்மை சாகுபடி முறை அறிமுகம்

கரும்பில் செம்மை சாகுபடி முறை அறிமுகம்

ADDED : ஜூலை 15, 2011 10:15 PM


Google News

வடமதுரை : நெல் பயிரில் மட்டுமே இருந்த செம்மை சாகுபடி முறை, கரும்புக்கும் கொண்டு வரப்பட்டுள்ளதாக, வடமதுரை வேளாண் உதவி இயக்குனர் பாஸ்கரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: வடமதுரை வட்டாரத்தில் ஆண்டுதோறும் 150 எக்டேரில் கரும்பு சாகுபடி நடக்கிறது. வழக்கமான சாகுபடி முறையில் ஹெக்டேருக்கு 90 டன் மகசூல் எடுப்பதே சிரமமாக உள்ளது. செம்மை கரும்பு சாகுபடி முறையில் 150 டன் மகசூல் எடுக்கலாம். ஒரு விதைப்பரு சீவல்களிலிருந்து 50 கிலோ எடையில் 5000 ஒரு விதைப்பரு சீவல்கள் கொண்டு முளைக்க வைக்கவும்.

கோகோ பீட் குழித்தட்டுகளில் நட்டு நாற்றுவிட்டு வளர்த்து 25-35 நாட்களில் வரிசைக்கு வரிசை 5 அடி, செடிக்கு செடி 2 அடி இடைவெளியில் நடவு செய்யவும். குறைந்த அளவு நீர் பயன்படுத்தி சாகுடி செய்ய வேண்டும். இம்முறை மூலம் பாசன நீர் தேவை குறைவதுடன் பாசன காலமும், இடைவெளியும் குறைகிறது. உர உபயோகத்திறன் 60 சதவீதம் கூடுகிறது. இதனால் அதிக லாபம் பெறலாம், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us