/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சமச்சீர் பாடப்புத்தகம் வழங்க பா.ஜ., கோரிக்கைசமச்சீர் பாடப்புத்தகம் வழங்க பா.ஜ., கோரிக்கை
சமச்சீர் பாடப்புத்தகம் வழங்க பா.ஜ., கோரிக்கை
சமச்சீர் பாடப்புத்தகம் வழங்க பா.ஜ., கோரிக்கை
சமச்சீர் பாடப்புத்தகம் வழங்க பா.ஜ., கோரிக்கை
ADDED : ஆக 01, 2011 11:42 PM
கோவை : நீக்க வேண்டியதை நீக்கிவிட்டு, சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே
மாணவர்களுக்கு வழங்க வேண்டும், என பா.ஜ., மாநில துணைத் தலைவர் எச்.ராஜா
கூறினார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத வன்முறை தடுப்பு
சட்ட மசோதா, இந்த பார்லிமென்ட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா, கிரிமினல் சட்டத்தின் அடிப்படை
கோட்பாட்டையே தகர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குற்றம்
நிரூபிக்கப்படும் வரையில், குற்றம் செய்ததாக கருதப்படும் நபரை நிரபராதி
என்கிறது கிரிமினல் சட்டம். ஆனால், இந்த சட்டம் மதக்கலவரங்கள் நடக்கும்
போது சிறுபான்மை மக்கள் குற்றவாளிகளாகக் கருதப்பட மாட்டார்கள் என்றும்,
பெரும்பான்மை இனத்தவர் பாதிக்கப்பட்டால் புகாரளிக்க கூட வழியில்லாத வகையில்
உருவாக்கப்பட்டுள்ளது. மதக்கலவரங்களை காரணம் காட்டி, அந்தந்த மாநில அரசை
கலைக்கவும் இம்மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அரசியல்
அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும்
வகையில் வெளிப்படையாக, முதல்வர் ஜெயலலிதா இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு
தெரிவித்திருப்பதை பா.ஜ., வரவேற்கிறது. பள்ளி பாடத்தில், தி.மு.க.,வின்
கொள்கை திணிப்பை ஏற்க முடியாது. நீக்க வேண்டியதை நீக்கிவிட்டு சமச்சீர்
பாடப்புத்தகங்களை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு, எச். ராஜா கூறினார்.


