Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அவிநாசி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் : வீடியோ கான்பரன்ஸில் முதல்வர் ஜெ., திறப்பு

அவிநாசி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் : வீடியோ கான்பரன்ஸில் முதல்வர் ஜெ., திறப்பு

அவிநாசி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் : வீடியோ கான்பரன்ஸில் முதல்வர் ஜெ., திறப்பு

அவிநாசி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் : வீடியோ கான்பரன்ஸில் முதல்வர் ஜெ., திறப்பு

ADDED : ஜூலை 19, 2011 12:37 AM


Google News

திருப்பூர் : அவிநாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவை, முதல்வர் ஜெயலலிதா நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் திறந்து வைத்தார்.

அரசின் சுகாதரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அவிநாசி அரசு மருத்துவமனை வளாகத்தில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவும், ஜெனரேட்டர் அறையும் கட்டப்பட்டன. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் திறந்து வைத்தார். கல்வெட்டினை திறந்து வைத்து முதல்வர் பேசுகையில்,''அவிநாசி அரசு மருத்துவமனையில், புறநோயாளிகள் கட்டடத்தை திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவிநாசி பகுதி நோயாளிகளும், பொதுமக்களும், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவையும், அங்குள்ள வசதியையும் பயன்படுத்தி பயனடைவர் என்று நம்புகிறேன்,'' என்றார்.



கலெக்டர் மதிவாணன், எம்.எல்.ஏ.,கருப்புசாமி ஆகியோர் முன்னிலையில் அவிநாசியில் வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் திருமலைசாமி, அவிநாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தாழிட்ட கட்டடத்துக்குள் திறப்பு விழா'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதல்வர் ஜெ., திறப்பு விழா நடத்தியதால், முன்னெச்சரிக்கை எனக்கூறி, காலை 9.00 மணி முதல் புறநோயாளிகள் பிரிவு கட்டடம் உட்புறம் தாழிடப்பட்டது. கலெக்டர், எம்.எல்.ஏ., உட்பட டாக்டர்கள், நிருபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ., பிரேமா உட்பட பொதுமக்கள் அனைவரும் வெளியே இருந்த பந்தலில் காத்திருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us