/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்
நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்
நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்
நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்
திருநெல்வேலி : பரமக்குடி கலவரம் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.
நெல்லை அருகே மானூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 3 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. விளாத்திக்குளம் அருகே ஒரு அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது. இச்சம்பவம் எதிரொலியாக நெல்லை - சங்கரன்கோவில் ரோட்டில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து வெளியூர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களுக்கு முன் பாதுகாப்புக்கு போலீஸ் வாகனம் சென்றது. குறைவான எண்ணிக்கையில் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ்ஸ்டாண்டில் காத்துக்கிடந்த மக்கள் நெருக்கியடித்து பஸ்களில் ஏறினர். நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற பஸ்கள் ராமையன்பட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. பாபநாசம் டிப்போவில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுப்பகுதி ஊர்களுக்கு பஸ்கள் புறப்பட்டுச்சென்றன. புளியங்குடி பகுதியில் இருந்து நேற்று காலை 9 மணி வரை நெல்லைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. நெல்லைக்கு வரும் அரசு, தனியார் ஊழியர்கள், மாணவ, மாணவிகள், வியாபாரிகள் அவதிப்பட்டனர். பஸ்கள் ஒழுங்காக இயக்கப்படாததால் நெல்லை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


