/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பழுதடைந்த ரயில்வே வீடுகளைஇடிப்பதற்கு 22ம் தேதி பொதுஏலம்பழுதடைந்த ரயில்வே வீடுகளைஇடிப்பதற்கு 22ம் தேதி பொதுஏலம்
பழுதடைந்த ரயில்வே வீடுகளைஇடிப்பதற்கு 22ம் தேதி பொதுஏலம்
பழுதடைந்த ரயில்வே வீடுகளைஇடிப்பதற்கு 22ம் தேதி பொதுஏலம்
பழுதடைந்த ரயில்வே வீடுகளைஇடிப்பதற்கு 22ம் தேதி பொதுஏலம்
ADDED : செப் 07, 2011 10:19 PM
விழுப்புரம்:விழுப்புரம் ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் பழுதடைந்த 88
வீடுகளை இடித்து தருவதற்கான ஏலம் வரும் 22ம் தேதி நடக்கிறது.விழுப்புரம்
ரயில் நிலையம் 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில்
உருவாக்கப்பட்டது.
இங்குள்ள வடக்கு மற்றும் தெற்கு ரயில்வே காலனிகளில்
102 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது.இதில் முதற் கட்டமாக 12 பழுதடைந்த
வீடுகளை இடித்து கொடுப்பதற்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. இரண்டாம்
கட்டமாக மீதமுள்ளவற்றில் 88 வீடுகளுக்கு வரும்22ம் தேதி காலை 10 மணிக்கு
ஏலம் விடப்படுகிறது.இதில் வீடுகளை தரையோடு இடித்து செங்கல், மரத்திலான
தளவாட பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். தண்டவாளம், மின் சாதனங்களை
ரயில்வேக்கு கொடுக்க வேண்டும். ஏலம் எடுக்க விரும்புவோர் 10 ஆயிரம் ரூபாய்
முன் பணம் செலுத்த வேண்டும். ஆரம்ப ஏலத் தொகை 50 ஆயிரம் ரூபாய் நிர்ணயம்
செய்துள்ளனர்.மேலும் விவரங்கள் வேண்டுவோர் 04146 - 241127 என்ற தொலைபேசி
எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


