ADDED : ஜூலை 15, 2011 12:59 AM
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த வெங்கந்தூரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (58).
லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு டாரஸ் லாரியில் செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்றார். வெங்கந்தூரைச் சேர்ந்த பொன்னிகண்ணு(48) கிளீனராக உடன் சென்றார். ஒலக்கூர் சாலையில் டயர் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கிளீனர் பொன்னிகண்ணு மீது அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். ஒலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


