/உள்ளூர் செய்திகள்/சென்னை/காஸ் சிலிண்டர் வெடித்து கணவன், மனைவி பரிதாப பலிகாஸ் சிலிண்டர் வெடித்து கணவன், மனைவி பரிதாப பலி
காஸ் சிலிண்டர் வெடித்து கணவன், மனைவி பரிதாப பலி
காஸ் சிலிண்டர் வெடித்து கணவன், மனைவி பரிதாப பலி
காஸ் சிலிண்டர் வெடித்து கணவன், மனைவி பரிதாப பலி
ADDED : அக் 08, 2011 01:15 AM
ராயபுரம்:சமையலின் போது காஸ் சிலிண்டர் வெடித்து கணவன், மனைவி பலியாகினர்.
இரு பிள்ளைகள், ஆபத்தான நிலையில், சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ராயபுரம் மார்க்கெட் சந்தைச் சேர்ந்தவர் சூரிலால், 40. பானிபூரி வியாபாரி.
இவரது மனைவி அனிதா, 36. பாலா, 15., மஞ்சுளா, 13. ஆகிய மகன், மகள் உள்ளனர்.
ஆயூதபூஜை அன்று அனைவரும் வீட்டில் இருந்தனர். அனிதா சமையல் செய்து
கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத நேரத்தில், காஸ் சிலிண்டரில்
தீப்பற்றி வேகமாக பரவியது.சற்று நேரத்தில், சிலிண்டர் வெடித்து சிதறி, வீடு
முழுதும் எரிந்தது. கணவன், மனைவி இருவரும் பிள்ளைகளை காப்பாற்ற
முயற்சித்து தீயில் கருகினர்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அவர்களை காப்பாற்றி
கே.எம்.சி.,மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, கணவன், மனைவி இருவரும்,
சிகிச்சை பலனின்றி இறந்தனர். பாலா, மஞ்சுளா இருவரும், ஆபத்தான நிலையில்,
சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ராயபுரம் போலீசார், மேற்கொண்டு
விசாரிக்கின்றனர்.


