ADDED : செப் 04, 2011 11:13 PM
திட்டக்குடி : பெருமுளை வ.உ.சி., அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா நடந்தது.
கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாணிக்கம் தலைமை தாங்கினார். தமிழ்அழகன் எம்.எல்.ஏ., தாசில்தார் சையத் ஜாபர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மன்னர் மன்னன் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அ.தி.மு.க., மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். விழாவில் ஒன்றிய செயலர் கந்தசாமி, நகர செயலர் நீதிமன்னன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் கந்தசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, அரசு வழக்கறிஞர் பாலசுரேந்திரன், ஊராட்சித் தலைவர் அருணாச்சலம், பள்ளி நிர்வாகி ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலர் சுரேஷ் நன்றி கூறினார்.


