Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்

ADDED : செப் 06, 2011 10:27 PM


Google News

கடலூர் : செயற்கை கை, கால்கள் பெற விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: முட்டிக்கு கீழ் கைகளையும், முட்டிக்கு கீழ் மற்றும் மேல் கால்களை இழந்த கல்வி பயிலும் மற்றும் பணி புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன வகை செயற்கை அவயங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

நவீன வகை செயற்கை அவயங்கள் தேவைப்படும் மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவிகள், பணியாளர்கள் மற்றும் சுய தொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடை யாள அட்டை நகல், மாணவர்கள் எனில் கல்வி நிலையங்களிலும், பணியாளர்கள் எனில் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து சான்று பெற்று கடலூரில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு உடனடியாக நேரில் விண்ணப்பிக்கவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us