/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ஆஸ்ரமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல் : 14 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவுஆஸ்ரமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல் : 14 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு
ஆஸ்ரமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல் : 14 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு
ஆஸ்ரமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல் : 14 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு
ஆஸ்ரமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல் : 14 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு
ADDED : செப் 01, 2011 01:31 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஆஸ்ரமத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக 14 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அடுத்த தபசுமலையில் கௌசிக சுவாமிகள் என்பவர் ஆஸ்ரமம் நடத்திவருகிறார்.
இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்கி கௌசிக சுவாமிகளிடம் ஆசி பெற்றுச் செல்வது வழக்கம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்ரமம் இயங்கிவருகிறது. ஆஸ்ரமத்துக்குள் செல்ல வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவதாகவும், உள்ளூர் கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களை அனுமதிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அரசுக்கு சொந்தமான தபசுமலையை கௌசிக சுவாமிகள் அபகரித்து வைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய பச்சமுத்துப்பட்டி கிராம மக்கள் 50 பேர் கும்பலாகச் சேர்ந்து கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஆஸ்ரமத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஆஸ்ரம நிர்வாகி கௌசிக சுவாமிகள் பனையப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து ஆஸ்ரமத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி கௌசிக சுவாமிகள் மதுரை உயர்மநீதிமன்ற கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், தபசுமலை ஆஸ்ரமம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில் தபசுமலை ஆஸ்ரமத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பச்சமுத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம், வெள்ளைச்சாமி, ஆறுமுகம், தபசி, கருப்பையா, முத்தழகு, கண்ணன், பெரியசாமி, மணிகண்டன், சோலை, மாரிமுத்து உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பனையப்பட்டி போலீஸார் அவர்களை தேடிவருகின்றனர்.


