/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விபத்தில் பெண் பலி: குழந்தை படுகாயம்விபத்தில் பெண் பலி: குழந்தை படுகாயம்
விபத்தில் பெண் பலி: குழந்தை படுகாயம்
விபத்தில் பெண் பலி: குழந்தை படுகாயம்
விபத்தில் பெண் பலி: குழந்தை படுகாயம்
ADDED : செப் 08, 2011 11:52 PM
விழுப்புரம் : டிப்பர் லாரி மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற பெண் இறந்தார்.
கண்டமங்கலம் அடுத்த நவம்மால்காப்பேர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மனைவி கல்யாணி,36. இவர் தனது 4 வயது குழந்தை மதனை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் விழுப்புரம்-புதுச்சேரி சாலையோரம் நடந்து சென்றார். அந்த வழியே வந்த டிப்பர் லாரி எதிர்பாராமல் மோதியதில் பலத்த காயமடைந்த கல்யாணி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மதன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


